0 கருத்துகள்

தமிழர் பொருளாதாரம்

தமிழர் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாதவாறு வட கிழக்கில் பெரும் பின்னடைவை கண்டிருக்கிறது. போர்நிறுத்த காலத்தில் வன்னியில் விவசாயத்தையும் சிறுகைத்தொழில்களையும் கொண்டு பசி பட்டினியற்ற ஒரு நிலையை உருவாக்க முடிந்திருந்தது. சிலர் போரினால் இடிந்துபோன வீடுகளையும் மீண்டும் கட்டியிருந்தனர். ஆனால் அடுத்த சில வருடங்களுக்குள்ளேயே எல்லாம் கனவாகிப் போகும் என்று யாரும் கற்பனை கூட செய்யவில்லை. போரினால் விலைமதிப்பற்ற உயிர்களை மட்டுமல்ல பெருவாரியான பயந்தரு மரங்கள், கால்நடைகள், விவசாய நிலங்கள் என குறுங்கால மற்றும் நீண்டகால முதலீடுகளை இழந்து எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் எம் மக்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்பிக்கை என்ற ஒன்றையே நம்பி வாழ்ந்து பழகிப்போன நாம், நாளைய உதயம் நமக்கானது என உறுதி கொள்ளவேண்டும். நம் மக்களுக்கான உதவியை நிறுவனப்படுத்தி செய்யக்கூடிய சூழ்நிலை தாயகத்தில் இல்லாத காரணத்தினால் தாயக உறவுகளுக்கூடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு சிறு அளவிலேனும் உதவ நாம் அனைவரும் முன் வர வேண்டும்.

க‌ல்வி ஒன்றே ந‌ம‌து எதிர்கால‌ சமுதாய‌த்தை வ‌ள‌மாக்கும். த‌மிழ‌ர் நாம் எமது ஜனநாயக‌ போராட்ட‌த்தை தொட‌ர்ந்து முன்னெடுப்ப‌த‌ற்கு வ‌ள‌மான எதிர்கால‌ ச‌முதாய‌ம் இன்றிய‌மையாத‌து.
read more
0 கருத்துகள்

தமிழர் முன் உள்ள சவால்...

மீண்டும் ஒரு தேர்தல் தமிழ் மக்களிடையே திணிக்கப்பட்டு இருக்கிறது. இன்று இருநூறுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள். இதில் முக்கியமாக மூன்று பிரிவுகளாக உடைந்து போன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு போட்டியிடும் அதேவேளை அரசாங்க தரப்பு வெற்றிலைச்சின்னத்தில் ஈ.பி.டி.பி சகிதம் வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டு தமிழ் வாக்குகளை சூறையாட முயற்ச்சிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் எப்பொழுது இலங்கையில் புலி பாசிசம் ஒழிகின்றதோ அன்றே அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறிய அமைச்சர் டக்ளஸ் இன்னும் சளைக்காமல் வாக்குறுதிகளை இந்த தேர்தலிலும் அள்ளி வீசிக்கொண்டு இருப்பது தான்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதிலிருந்து பிரிந்து போன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தமிழர் எம் முன் காணப்படும் சவால்களை முறியடிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா. குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக தமிழர் தரப்பின் நியாமான கோரிக்கைகளான சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி போன்றவற்றை மழுங்கடிப்பதாக பிரிவினைகள் அமைந்து விடக்கூடாதென அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அதுதான் அறுபதாண்டு கால உரிமைப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.
read more