தமிழர் முன் உள்ள சவால்...

மீண்டும் ஒரு தேர்தல் தமிழ் மக்களிடையே திணிக்கப்பட்டு இருக்கிறது. இன்று இருநூறுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள். இதில் முக்கியமாக மூன்று பிரிவுகளாக உடைந்து போன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு போட்டியிடும் அதேவேளை அரசாங்க தரப்பு வெற்றிலைச்சின்னத்தில் ஈ.பி.டி.பி சகிதம் வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டு தமிழ் வாக்குகளை சூறையாட முயற்ச்சிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் எப்பொழுது இலங்கையில் புலி பாசிசம் ஒழிகின்றதோ அன்றே அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறிய அமைச்சர் டக்ளஸ் இன்னும் சளைக்காமல் வாக்குறுதிகளை இந்த தேர்தலிலும் அள்ளி வீசிக்கொண்டு இருப்பது தான்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதிலிருந்து பிரிந்து போன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தமிழர் எம் முன் காணப்படும் சவால்களை முறியடிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா. குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக தமிழர் தரப்பின் நியாமான கோரிக்கைகளான சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி போன்றவற்றை மழுங்கடிப்பதாக பிரிவினைகள் அமைந்து விடக்கூடாதென அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அதுதான் அறுபதாண்டு கால உரிமைப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக